/* */

நீலகிரியில் கொரோனா தடுப்பூசி முகாம்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. 221 முகாம்களில் 884 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்

HIGHLIGHTS

நீலகிரியில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ( கோப்பு படம் )

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் என 201 நிலையான மையங்கள் மற்றும் 20 நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. 221 முகாம்களில் 884 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் நோய் உள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை 5,55,750 பேர், இரண்டாவது தவணை 5,36,021 பேர் என மொத்தம் 10,91,771 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தகுதி வாய்ந்த அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Updated On: 25 March 2022 4:42 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  2. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  3. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  4. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  5. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  6. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  7. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  8. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்