கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

கூடலூர் சுற்றுப்பகுதியில் இடியுடன் கனமழை பெய்தது; இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

கடந்த இரண்டு நாட்களாக கூடலூர் பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வானிலையில் அவ்வப்போது மழை பெய்து வந்தது.

இந்நிலையில், இன்று மாலை சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கூடலூர், தொரப்பள்ளி, ஸ்ரீ மதுரை, உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. இந்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business