/* */

4 குழுக்கள் தொடர்ந்து 12 ம் நாளாக புலியை தேடும் பணி: வன உயிரின பாதுகாவலர்பேட்டி

T23 புலி மனிதர்களைசில இடங்களில்கொன்றது குறித்துஅறிவியல்பூர்வமான விசாரணைநடைபெற்று வருகிவதாக தலைமை வன உயிரின பாதுகாவலர்பேட்டி

HIGHLIGHTS

4 குழுக்கள் தொடர்ந்து 12 ம் நாளாக புலியை  தேடும் பணி: வன உயிரின பாதுகாவலர்பேட்டி
X

தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் T23 புலியை பிடிக்கும் பணி 12 வது நாளாக நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை பார்வையிட்ட பின்னர் தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்:

T23 புலி மனிதர்களை சில இடங்களில் கொன்றது குறித்து அறிவியல் பூர்வமான விசாரணை நடைபெற்று வருகின்றது. தினமும் புதிய வியூகங்களை அறிவியல் பூர்வமாக செயல்படுத்தி T23 புலியை பிடிக்க முயன்று வருகின்றோம். T 23 புலியின் பாதுகாப்பு, வனத்துறையினர் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் வைத்து பணிகள் நடைபெற்று வருகின்றது

சிங்காரா வனப்பகுதியில் T23 புலியின் தடயங்கள் இருப்பதால் அங்கு கண்காணிப்பு அதிகப்படுத்தி இருக்கின்றோம் காட்டில் T23 புலியின் வயது காரணமாக அதற்கு வேட்டையாடுவதில் சிரமங்கள் இருக்கின்றது சிங்காரா வனப்பகுதியில் பரண்கள் அமைத்து புலியை கண்காணித்து வருகிறோம் அந்த பகுதியில் எந்தவித இடையூறும் இல்லாதபடி பார்த்து கொள்ளப்படுகின்றது மன்றாடியார் வனப் பகுதியிலும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகின்றது, தெர்மல் டிரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது அறிவியல் பூர்வமாக புலியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்த அவர், 6 மருத்துவ குழுவினர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இந்த T 23 புலியை ஆட்கொல்லி என சொல்ல முடியாது என கூறிய அவர்,ஆட்கொல்லி புலியின் முதன்மை உணவாக மனிதர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்தப்புலி அப்படி இல்லை என்பதால் இதை ஆட்கொல்லி புலியாக இதை எடுத்து கொள்ள முடியாது , புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அதை மருத்துவ குழுவினர் மூலம் கண்காணித்து அதன் நடவடிக்கைகளை ஆய்வு செய்யப்பட இருக்கின்றது.இந்த புலியால் ஏற்பட்ட 4 மரணங்களில் முதல் இரு மரணங்கள் இந்த புலியால் நடந்தது என்பதை உறுதிப்படுத்த வில்லை இதற்கு டி.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும் புலியை பிடித்து கூண்டில் அடைத்தால் அது மனரீதியாக பாதிக்கப்படும் என்பது உண்மை, ஆனால் அதை சரி செய்து விட முடியும்.

வருங்காலங்களில் பிரச்சினைக்குரிய புலிகளை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க முடியும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது, ரேடியோ காலர்களின் எடையும் 5 கிலோ வரை இருக்கும் என்பதால் அதற்கு பிரச்சினை இருக்காது தன்னார்வலர்களின் செயல்பாடுகளையும் இந்த புலியை பிடிக்க பயன்படுத்தி கொள்கின்றோம் T23 புலியை மயக்க மருத்து கொடுத்து பிடித்த பின்னர், அடுத்த என்ன செய்யலாம் என்பதை மருத்துவகுழுவினர் முடிவு செய்து சொல்வார்கள். இதற்காக டெல்லியில் இருந்து ரேடியோ காலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.

காடுகளில் வாழும் புலி 14 வருடங்கள் வரை இருக்கும், ஆனால் வன உயிரின பூங்காகளில் அடைத்து அவற்றை பாதுகாக்கும் போது கூடுதலாக 10 ஆண்டுகள் புலி உயிருடன் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 6 Oct 2021 7:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?