/* */

நில உட்பிரிவு செய்ய லஞ்சம்: பந்தலூர் நில அளவையர் கைது

நில உட்பிரிவு செய்ய லஞ்சம் பெற்றதாக, பந்தலூர் நில அளவையரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நில உட்பிரிவு செய்ய லஞ்சம்: பந்தலூர் நில அளவையர் கைது
X

 பழனிசாமி

நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மாமியார், இவருக்கு 30 சென்ட் நிலம் வழங்கியுள்ளார். இந்த நிலத்தை உட்பிரிவு செய்ய, பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாசுதேவன் விண்ணப்பித்துள்ளார். நில அளவை செய்வதற்கு, நில அளவையர் பழனிசாமி, வாசுதேவனிடம் ரூ.6000 லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து வாசுதேவன், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்துடன் வாசுதேவன் பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று, நில அளவையர் பழனிசாமிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் கீதாலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் ரங்கநாதன், சாதன பிரியா போலீஸார் நில அளவையர் பழனிசாமியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Updated On: 8 March 2022 9:42 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  2. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  3. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  4. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  5. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  6. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  8. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  9. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
  10. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்