/* */

கூடலூர் அருகே வாகன விபத்து: 13 பேர் படுகாயம்

கேரள மாநிலத்தில் இருந்து உதகையை நோக்கி வந்த சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

கூடலூர் அருகே வாகன விபத்து: 13 பேர் படுகாயம்
X

விபத்துக்குள்ளான வாகனம்.

சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. இந்நிலையில் இன்று கேரள மாநிலம் கொச்சினில் இருந்து 13 பேர் உதகைக்கு சுற்றுலா வந்தபோது நாடுகாணி என்னும் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது.

இதில் வாகனத்தில் பயணித்தவர்கள் விபத்தில் சிக்கினார். உடனடியாக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்தில் காயமடைந்த நபர்களை மீட்டு சிறு காயங்களுடன் இருந்த நான்கு பேரை கூடலூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

பலத்த காயமடைந்த 9 பேரை கேரளாவில் உள்ள நிலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 14 Dec 2021 9:43 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...