/* */

தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்த 22 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

பிடிபட்ட மலைப்பாம்பை தமிழக-கேரள எல்லை கோட்டமூலா என்ற அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.

HIGHLIGHTS

தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்த  22 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
X

பிடிபட்ட மலைப்பாம்பு.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில், இன்று வழக்கம்போல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். திடீரென இறை தேடி அங்கு வந்த ஒரு மலைப்பாம்பை கண்டு தோட்டத் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த நிலையில் சேரம்பாடி பகுதியில் பாம்பு பிடிப்பதில் வல்லமை பெற்ற தம்பா என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அந்த பகுதி சென்ற தம்பா அந்த பாம்பை பிடிக்கும் பணியில் சுமார் அரை மணி நேரம் போராடி அந்த பாம்பை பிடித்தார். சுமார் 35 கிலோ எடையும் 22 அடி நீளமுள்ள பிரம்மாண்ட மலைப்பாம்பை பிடித்த தம்பா அப்பகுதி மக்கள் உதவியோடு சேரம்பாடி வனச்சரக வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். அந்த பிரம்மாண்ட பாம்பை வனத்துறையினர் தமிழக-கேரள எல்லையான கோட்டமூலா அடர்ந்த வனப்பகுதியில், வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.

Updated On: 11 Sep 2021 3:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  5. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  7. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  8. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி
  10. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!