/* */

யானைக்கு தீ வைத்த 2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

யானைக்கு தீ வைத்த 2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
X

உதகை அருகே காட்டுயானைக்கு தீ வைத்த விவகாரத்தில் தொடர்புடைய 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியில் காயத்துடன் ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றித் திரிந்தது. இந்த யானை தனியார் தங்கும் விடுதிக்குள் கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் ரேமாண்ட் டீன் மற்றும் கூலி தொழிலாளி பிரசாந்த் ஆகியோர் யானை மீது தீப்பந்தத்தை பற்ற வைத்து வீசினர். இதனால் காது பகுதியில் தீ பற்றியதால் யானை துடிதுடித்து தீக்காயத்துடன் வனப்பகுதிக்குள் ஓடியது . மேலும் யானையின் காதில் இருந்து ரத்தம் தொடர்ந்து வெளியேறியது.

பின்னர் ஜனவரி 19-ந்தேதி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. யானைக்கு தீ வைத்த சம்பவம் குறித்த வீடியோவும் வெளியானது. அதனையடுத்து விடுதி உரிமையாளர்கள் உள்பட இருவரும் கைது செய்யப்பட்டு குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரிக்கி ரெயான் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் யானைக்கு உயிருடன் தீ வைத்த விடுதி உரிமையாளர்கள் ரேமாண்ட் டீன் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 10 March 2021 1:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!