தமிழக கல்வி முறையில் மாற்றம் தேவைப்படுகிறதா?

தமிழக கல்வி முறையில்  மாற்றம் தேவைப்படுகிறதா?

வகுப்பறை (கோப்பு படம்)

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய பாஸ் செய்து வைக்கிறார்கள் என்பதை ஒரு கல்வியாளர் மிகவும் குறைபட்டு கூறிக் கொண்டிருந்தார்.

என்றைக்கு பெயில் ஆக்க முடியாது என்ற நிலை வந்ததோ அன்றைக்கு மாணவர்கள் புத்தகத்தை எடுத்து ஓரமாக வைத்து விட்டான் என்று கூறினார். எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு வரை சரியாக படிக்க முடியாத ஒரு மாணவன் எப்படி திடீரென்று 9, 10 என்று வரும் போது கணக்கு, விஞ்ஞானம், ஆங்கிலம், தமிழ் என்று படிக்க முடியும்? அவனே தனிப்பட்ட முறையில் திண்டாடிப் போவான் என்று கூறினார்.

அத்தோடு கூட புதிதாக ஒரு தகவல் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. தமிழகத்தில் கல்வித்துறை மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று காட்டுவதற்காக மதிப்பெண்களை வாரி குவித்து கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றார். காரணம் அந்த மாணவன் பெயிலாகி விட்டால் மீண்டும் அவனை அழைத்து வந்து விசேஷ வகுப்புகள் நடத்தி அவனை பாஸ் செய்து வைக்க வேண்டும் என்ற பாரம் ஆசிரியர் தலையில் வந்து விழுகிறது.

அவர்களுடைய விடுமுறை நாட்கள் இதனால் குறைந்து போகிறது. மீறி பாஸ் செய்யாமல் விட்டாலோ தற்கொலை, விசாரணை, பிரமோஷன் தடை என்று தேவையில்லாத சிக்கல்கள். இதற்கு ஒரே தீர்வு மதிப்பெண்களை அள்ளித் தூக்கிப் போட்டு எல்லோரையும் பாஸ் செய்து விட்டு விட்டால் யாராலும் எதுவும் செய்ய முடியாது. எவன் வந்து எப்படி இத்தனை மதிப்பெண் வந்தது என்று கேட்பான்? மதிப்பெண் குறைந்தால் revaluation போடுவார்கள். கூடினால் யார் போடுவார்கள்?

இதே வேலையைத் தான் 10 12 இரண்டு வகுப்புகளிலும் செய்கிறார்கள் என்று கூறினார். அதன் பின்னர் எப்படியோ இட ஒதுக்கீடு அது இது என்று கூறி ஏதோ ஒரு கல்லூரியில் சேர்ந்து ரூட் தல, ரவுடித்தனம் என்று மூன்றாண்டுகளை 30 அரியர்களை வைத்துக் கொண்டு முடித்து விடுவான். எப்போது கேட்டாலும் பையன் பி காம் படிக்கிறான், பி ஏ படிக்கிறான் என்று மிதப்பாக கூறிக் கொள்வார்கள். இவர்கள் எல்லோரும் மூன்றாண்டுகள் கல்லூரியில் சேர்வார்களே தவிர படிப்பை முடிக்கவே மாட்டார்கள்.

படித்து முடிக்காமல் கல்லூரி வாழ்க்கையை முடித்து விட்டு வெளியே வந்த பின்னர் மிகவும் சாமானிய வேலைகளில் சேர்ந்து விடுவார்கள். ஆனால் கேட்டால் பிகாம் படித்தேன், பி எஸ் சி படித்தேன் என்று கூற வேண்டியது. இருக்கிற சாமானிய தொழில்களை செய்ய வேண்டும் என்றால் தேவையில்லாமல் கல்லூரியில் சேர்ந்து மூன்றாண்டுகளை வீணாக்கி, பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியே வரும் போது சரியாக எழுதப்படிக்கக் கூட தெரியாத அளவில் படித்து முடித்துவிட்டு வருகிறார்கள்.

இதில் இவர்களை நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ துறையில் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இன்னும் இது போல மோசமான கல்வி நிலையில் வைத்து இட ஒதுக்கீடு மேனேஜ்மென்ட் கோட்டா என்றெல்லாம் சொல்லி பணத்தை பிடுங்கி கல்லூரிகளில் சேர்த்துக்கொண்டு பாடத்திட்ட முறைகளை கல்வியை அழித்து ஒழித்துக் கட்டி வருகிறார்கள்.

இதன் பின்னால் ஒரு மாபெரும் கூட்டம் துல்லியமாகத் திட்டமிட்டு அழிவை நோக்கி மொத்த தமிழகத்தையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று பல பத்தாண்டுகளாக வேலை செய்து வருகிறது. இவர்களே இவர்கள் வீட்டுப் பிள்ளைகளை இவர்களுக்கு இவர்களிடம் அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்க மாட்டார்கள். தாங்கள் நிறுவனம் நடத்தினால் அதில் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு கூட வேலை கொடுக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மோசமான கல்வித் தரம் பெற்றவர்கள் இவர்கள்.

மற்ற எல்லா பயங்கரவாத செயல்பாடுகளை பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது கல்வி பயங்கரவாதம் என்று உணர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினார். இப்படி ஒரு பார்வை ஒரு கல்வியாளரிடமிருந்து அதுவும் பிராமண சமுதாயத்தை சேராத ஒரு கல்வியாளரிடமிருந்து வந்தது அதிர்ச்சியாக இருந்தது.

Tags

Next Story