காணாமல் போன பழைய மழைமானி..! சிறந்த வாழ்க்கைமுறையை பின்பற்றிய முன்னோர்கள்..!

காணாமல் போன பழைய மழைமானி..! சிறந்த வாழ்க்கைமுறையை பின்பற்றிய முன்னோர்கள்..!
X

ஆட்டுரல் -கோப்பு படம் 

நமது முன்னோர்கள் செய்த ஒவ்வொரு முன்னெடுப்பும் அவர்கள் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது. ஆனால் இன்று அவைகள் காணாமல் போய்விட்டன.

கிராமங்களில் இப்போது ஆட்டுக்கல் வயதான தாத்தா, பாட்டி போல ஒரு மூலையில் கிடக்கும் காட்சியை நாம் காணமுடியும். கிரைண்டர் வந்ததால் ஆட்டுக்கல் காணாமல் போனது நமது ஆரோக்கியமும் கூட. பொதுவாக ஆட்டுக்கல் வீட்டின் சாளையில்(முற்றம்) போடப்பட்டிருப்பதையும் நாம் அறிவோம். குறிப்பாக 80களில் இளைஞர்களாக இருந்தவர்களுக்கு நன்றாகவே தெரிந்து இருக்கும். எதற்காக ஆட்டுக்கல் மற்றும் உரல் போன்றவைகளை நமது முன்னோர்கள் சாளையில் அமைத்தார்கள் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

ஆட்டுக்கல் அது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல. அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டின் சாளையில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவு மழையா என்பதைக் கண்டுணர்வர். .

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர். அறிவியல் கணக்குப்படி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறியும். ஆக எத்தனை “பதினு” மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு தயாராவார்கள்.

மழை பெய்யும் திறனுக்கு ஏற்ப தமிழில் மழைக்கான பெயர் வைக்கப்பட்டிருந்தது.

“தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.

“சாரல்” – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.

“மழை” – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.

” பெருமழை” – நீர்நிலைகள் நிரம்பும்.

” அடைமழை” – ஐப்பசியில் பெய்வது

” கனமழை” – கார்த்திகையில் பெய்வது..

இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது:

மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.

அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.

4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.

மழையைப் பற்றித் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே "மாறாநீர்" என குறிப்பிட்டிருக்கிறார். இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பது உண்மை. அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக்கு அணி.

(குறள் 701)

இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார். நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு.

(குறள் 452)

எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது.அதாவது இந்த உலகம் தோன்றும்போது இங்கு எவ்வளவு நீர் இருந்ததோ அது அப்படியேதான் இன்னும் உள்ளது. மழையாக பெய்து நமது பயன்பாடு பெற்று மீண்டும் நிலத்தில் வீழ்ந்து ஆவியாகி மீண்டும் மழையாகி இப்படி சுழன்றுகொண்டே இருக்கிறது நீர்., அதன் அளவு மாறாமல்.

ஒரு உழவு மழை :

‘பொதுவாக கிராமப்புறங்களில் மிக அதிகமாக 5 செ.மீஅளவுக்கு மழை பெய்தால் ஒரு உழவு மழை என சொல்வது உண்டு.பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.’


நிலத்தடி நீரைக் காப்பாற்ற நாம் பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவேண்டும் ...

பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்...

இதன் காரணம் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்..

பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை. அதனால் பனை வளர்ப்போம்; பயன் பெறுவோம். தற்போது பல மாவட்டங்களில் பனை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, மகிழ்ச்சிக்குரியது. தமிழ்நாடு முழுவதும் அங்கெங்கெ அரசு மற்றும் தனியார் சேவை நிறுவனங்கள் பனை விதைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

எதிர்கால சந்ததி குறித்து சிந்திக்கும் பழங்குடி மக்கள்

இன்றும் பழங்குடி மக்கள் காடுகளில் தேன் எடுக்கச் சென்றால் ஒரு கூடு முழுவதையும் அழிக்கமாட்டார்கள். அது மீண்டும் வளர்வதற்கும் தேனீக்களுக்கு உணவுக்கும் ஒரு பகுதியை விட்டுவிடும் பழக்கம் உள்ளவர்கள். அதுபோலவே எந்த வனப்பொருள்களையும் தங்கள் பயன்பாட்டுக்கு எடுக்கும்போது அதை முழுவதுமாக வெட்டி அழிந்துவிடாமல் அடுத்து வளர்வதற்குத் தேவையானதை விடுவது வழக்கம். அது இயற்கை சமநிலையை ஏற்படுத்த இயற்கையாகவே அவர்களுக்கு ஏற்பட்ட பழக்கம்.

அதுபோல நமது முன்னோர்களும் நமது தேவைக்காகவே நீர்நிலைகளை பேணிக்காத்து வந்தனர். ஆனால் இன்று நீர்நிலைகள் வியாபாரமாக்கப்பட்டுவிட்டன. அதன் வெளிப்பாடுதான் இன்றைய இயற்கைச் சீற்றங்களுக்கு காரணமாகின்றன.

Tags

Next Story
Similar Posts
ஸ்கிரீன் டைம் சிண்ட்ரோம்  பற்றி உங்களுக்கு தெரியுமா?
வாய்வழி செக்சால் மேலை நாடுகளில் உருவாகி வரும் ஒரு வகை தொண்டை புற்றுநோய்
உங்களுக்கு நாள் பட்ட வறட்டு இருமலா? அது மரபணு பிரச்சினையாக இருக்கலாம்
திவாலாகும் 23andMe நிறுவனம்: கேள்விக்குறியில் மில்லியன் கணக்கானவர்களின் மரபணு
பிறந்தது முதல் 10 வயது வரை... - குழந்தைகளின் போஷாக்கான வளர்ச்சிக்கு தர வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா?
உடல் நலத்தை பாதிக்கும் போதை பழக்கங்களில் இருந்து விடுபடுவது எப்படி?
பிறவியிலேயே சிலர் மிகவும் உயரம் குறைந்தவர்களாக, குள்ளமாக பிறப்பது ஏன்?
நீண்ட தூர பயணங்களில் என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும் என்று தெரியுமா?
40 வயது கடந்துட்டீங்களா? இந்த ‘ஒயிட் பாய்ஷன்’ உணவுகளை கட்டாயம் தவிர்த்திடுங்க!
சர்க்கரை நோயை ஏன் பரம்பரை நோய்ன்னு சொல்றாங்க... தெரியுமா?
காணாமல் போன பழைய மழைமானி..! சிறந்த வாழ்க்கைமுறையை பின்பற்றிய முன்னோர்கள்..!
டாக்டர் பரிந்துரை இல்லாமல் மெடிக்கலில் மருந்து வாங்கி சாப்பிடலாமா?
உங்களுக்கு பைல்ஸ் கம்ப்ளைண்ட் இருக்குதா? இதை எல்லாம் இனிமேல் சாப்பிடாதீங்க!
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி