/* */

திருச்செங்கோடு:கொரோனா தடுப்பூசி வழங்காததால் பொதுமக்கள் மறியல்

திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசிகள் வழங்கப்படாததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருச்செங்கோடு:கொரோனா தடுப்பூசி வழங்காததால் பொதுமக்கள் மறியல்
X

தடுப்பூசிகள் வழங்கப்படாததால் காவல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யும் பொதுமக்களை படத்தில் காணலாம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று தடுப்பூசி போடும் படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஏராளமான எண்ணிக்கையில் பொதுமக்கள் காத்திருந்தனர். அங்கு வந்த ஆரம்ப சுகாதார துறை ஊழியர்கள் மருத்துவர்கள் இன்று இந்த மையத்தில் தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் தடுப்பூசி போடுவதாக அறிவித்துவிட்டு, தற்போது தடுப்பூசிகள் வழங்கப்படாது என கூறுவது எந்த விதத்தில் நியாயம் என, அங்கிருந்த மருத்துவ அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர். அத்துடன், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த திருச்செங்கோடு காவல்துறையினர்,அங்கிருந்த பொதுமக்களை சமாதானம் செய்து, இனி வரும் நாட்களில் அதிக அளவில் இரு தடுப்பூசிகள் அந்தந்த பகுதியில் போடப்படும் என பொதுமக்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் சீத்தாராம்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 13 July 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...