/* */

போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் மீது வழக்குப்பதிவு

திருச்செங்கோடு மகளிர் காவல்நிலையத்தில் இன்று ஒரே நாளில் போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் மீது வழக்குப்பதிவு
X

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாணார் பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்த தேவராஜ் கட்டிடத் தொழிலாளியான இவர் இவரது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த10 வயது சிறுமியை கடந்த 6ம் தேதி தேவராஜ் லாவகமாக பேசி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்துள்ளார். சிறுமி திமிரவே கைகால்களை பிடித்து கொண்டு தவறாக நடக்க முயற்சித்துள்ளார். சிறுமி சத்தம் போடவே சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர்.

இதனை பார்த்த தேவராஜ் தப்பி ஓடிவிட்டான். இது குறித்து சிறுமியின் தாயார் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது தேர்தல் நாள் என்பதால் காவல் நிலையத்தில் காவலர்கள் இல்லை நாளை வாருங்கள் என்று கூறி திருப்பி அனுப்பியாதாக தெரிகிறது. இதனையடுத்து கடந்த 7 ம்தேதி திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அங்கு புகாரை பெற்றக் கொண்டதற்கான எந்த சான்றும் தரவில்லைஎன கூறப்படுகிறது. இந்த நிலையில் தேவராஜின் உறவினர்கள் சிலர் புகார் கொடுக்க கூடாது என தங்களை மிரட்டுவதாகவும் 2 நாட்களாக மகளிர் காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுமியின் தாயார் திருச்செங்கோடு காவல் துணை கண் காணிப்பாளர் செல்வத்திடம் புகார் தெரிவித்துள்ளார். இததைனயடுத்து தேவராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் தப்பியோடிய தேவாரஜை தேடிவருகின்றனர்.

இதே போன்று திருச்செங்கோட்டை அடுத்த வாய்கால் தோட்டம் பகதியை சேர்ந்த புவனேஸ்வரன் தறித்தொழிலாளியான இவரது மனைவியின் சகோதரி ஈரோட்டில் வசித்து வருகிறார். கணவரை பிரிந்து 2வது திருமணம் செய்து கொண்டு ஈரோட்டில் வசித்து வந்த இவரது மகள் 12ம் வகுப்பு படிக்கும் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அந்தப் பெண்ணின் தாயார் அவரை திருச்செங்கோடு செங்கோடம் பாளையம் வாய்க்கால் தோட்டத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.

கடந்த இரண்டு வருடமாக தனது சித்தி வீட்டில் இருந்து வந்த சிறுமிக்கும் அவரது சித்தப்பா புவனேஸ்வரனுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்தள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வயிறு வலிப்பதாக சிறுமி கூறவே அவரை புவனேஸ்வரனின் மனைவி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே மருத்துவர் பரிசோதித்தில் சிறுமி 3மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. சட்ட விரோத கருக்கலைப்பு செய்ய விரும்பாத மருத்துவர் இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் இதுகுறித்து திருச்செங்கோடு அனைத்துமகளிர் காவல் நிலையத்திற்கு தவகல் கொடுத்து விசாரிக்க சொன்னதன் பேரில் புவனேஸ்வரன் மீது போக்சோ சட்டடத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் காவல் நிலைய போலீசார் இதனை விசாரனை செய்து வருகின்றனர்.

Updated On: 11 April 2021 6:35 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்