குமாரபாளையத்தில் இளைஞர் பெருமன்றத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் இளைஞர் பெருமன்றத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்.

குமாரபாளையம் ஏ.ஐ.ஒய்.எப். சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலர் அசோகன் தலைமை தாங்கினார்.

இந்த போராட்டத்தில் நீட் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். உயிரிழந்த மாணவ, மாணவியர் குடும்பத்தாருக்கு நிவாரணம் வளநக வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மாநில செயலர் பாரதி, மாவட்ட குழு நிர்வாகி வக்கீல் கார்த்திகேயன், மாவட்ட தலைவர் கணேஷ்குமார், சி.பி.எம். நகர செயலர் கேசவன், மனோகரன், ஈஸ்வரன், அர்த்தனாரி, மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture