Begin typing your search above and press return to search.
பள்ளிபாளையத்தில் போதை வாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி
மதுபோதையில் இருந்த வாலிபர், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி பலியானார்.
HIGHLIGHTS
பள்ளிபாளையம் ஓட்டமெத்தை பகுதியில் வசித்து வந்தவர் அசோக்குமார், 28. வெப்படையில் உள்ள முடி திருத்தும் கடையில் பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் மாலை 06:00 மணியளவில் போதையில், புதன் சந்தை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. போதையில் நீரில் மூழ்கியவர் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவில் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இரவு 11:00 மணியளவில் இவரது சடலம் கரை ஒதுங்கியது. அசோக் குமார் சடலத்தை மீட்ட போலீசார், இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.