பள்ளிபாளையம் அருகே ஆனங்கூர் சொசைட்டியில் நூல் திருடியதாக மூவர் கைது

பள்ளிபாளையம் அருகே ஆனங்கூர் சொசைட்டியில் நூல் திருடியதாக  மூவர் கைது
X
பள்ளிபாளையம் அருகே சொசைட்டியில் நூல் திருடியதாக, மூவர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளிபாளையம் அருகே ஆனங்கூர் நெசவாளர் சொசைட்டி உள்ளது. பணியாளர்கள் நேற்று காலை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, 22 நூல் பேல்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இதுபற்றி வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன், 27, வஜ்ரவேல், 34, தாளபாளையத்தை சேர்ந்த பிரபாகரன், 35, ஆகியோர்கள் நூல்களை திருடியது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 1,50,000 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story
ai in future agriculture