Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு அடி, கொலை மிரட்டல்: ஒருவர் கைது
குமாரபாளையத்தில் முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு சத்யா நகர் பகுதியில் வசிப்பவர் துங்கம்மாள், 58. இவரது வீட்டின் எதிரில் வசிப்பவர் மோகன்ராஜ்,24. விவசாய கூலி.
நேற்றுமுன்தினம் இரவு முன்விரோதம் காரணமாக மோகன்ராஜ், துங்கம்மாளை தகாத வார்த்தையால் திட்டியும், கைகளால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
இது குறித்து துங்கம்மாள் குமாரபாளையம் போலீசில் புகார் தர, எஸ்.ஐ. மலர்விழி வழக்குபதிவு செய்து மோகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.