/* */

பள்ளிபாளையத்தில் கிணற்றுக்குள் விழுந்த நாயை தீயணைப்புத்துறை மீட்பு

பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த நாயை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில்  கிணற்றுக்குள்  விழுந்த நாயை தீயணைப்புத்துறை மீட்பு
X

பள்ளிபாளையம் அக்ரஹாரத்தில் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட நாய்.

பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் காகத்திற்கு வைத்திருந்த உணவை சாப்பிட சென்ற நாய் தண்ணீர் இல்லாத 50அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தது. நாயை உயிருடன் இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள அக்ரஹாரம் சாந்தி பிஸ்கட் கடை அருகில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த பகுதியில் திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தினால், இக்கிணறு பயன்பாடு இன்றி கிடக்கிறது.

இந்நிலையில் இன்று காலை அந்த கிணற்றின் மீது காகம் சாப்பிட யாரோ உணவு வைத்துள்ளனர். காகத்திற்கு வைத்திருந்த உணவை சாப்பிட சென்ற நாய் எதிர்பாராமல் அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் நாயை மீட்பதற்காக குமராபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குமராபாளையம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி நாயை உயிருடன் மீட்டனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Updated On: 14 April 2021 8:41 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...