/* */

குமாரபாளையத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் 50 மரக்கன்று நடப்பட்டது

குமாரபாளையத்தில் விஷ்வ இந்து பரிஷத் மாநில பண்பு பயிற்சி முகாமில் 50 மரக்கன்று நடுதல் நிகழ்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில்   50 மரக்கன்று நடப்பட்டது
X

குமாரபாளையத்தில் விஷ்வ இந்து பரிஷத் மாநில பண்பு பயிற்சி முகாமில் மாநில அமைப்பு செயலர் இராமன் தலைமையில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விஷ்வ இந்து பரிஷத் மாநில பண்பு பயிற்சி முகாம் மாநில செயலர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது.

இது பற்றி கோட்ட பொறுப்பாளர் அழகிரி கூறும்போது

பஜ்ரங்தள் முகாம், விஷ்வ இந்து பரிசத் 10 நாட்கள் முகாம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் இளைஞர்களுக்கு சிலம்பம், கராத்தே பயிற்சிகள் வழங்கப்படும். சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன. பாரத நாட்டின் பெருமைகள், நம் நாட்டின் கலைகளின் பெருமைகள், முன்னோர்கள் குறித்த தகவல்கள் உள்ளிட்ட பல தலைப்புகளில் பேசவுள்ளனர். நேற்று 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், தென் பாரத அமைப்பு செயலர் நாகராஜன், திருக்கோவில் மற்றும் திருமண அமைப்பின் தமிழக கேரளா அமைப்பாளர் சரவண கார்த்திக், மாநில அமைப்பு செயலர் இராமன், மாநில இணை செயலர் கிரண், மாவட்ட விவசாய அணி தலைவர் பன்னீர்செல்வம், பஜ்ரங்தள் மாநில நிர்வாகிகள் உள்பட பலரும் பங்கேற்றனர் என்றார்.

Updated On: 17 May 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  2. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  4. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  5. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  6. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  9. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’