குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தடுப்பூசி முகாம்

குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தடுப்பூசி முகாம்
X

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தேர்தல் பணிகளை மேற்கொள்ளவிருக்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் 247 அலுவலர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். ஓட்டுப்பதிவு பணி செய்வோர்கள் இரண்டு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வாக்குச்சாவடி பயிற்சி முகாம் நடைபெற்ற குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமிற்கு 200க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தாலும் 10 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future