அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, ஸ்பீக்கர் செட் வழங்கும் விழா

X
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் பள்ளிக்கு ஸ்பீக்கர் செட் வழங்கும் விழா நடைபெற்றது.
By - K.S.Balakumaran, Reporter |15 Aug 2022 8:09 AM IST
குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் பள்ளிக்கு ஸ்பீக்கர் செட் வழங்கும் விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்களுக்கு சீருடை மற்றும் பள்ளிக்கு ஸ்பீக்கர் செட் வழங்கும் விழா உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பராஜ் தலைமையில் நடைபெற்றது.
நகர தி.மு.க. செயலர் செல்வம், பி.டி.ஏ. தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் சுப்ரமணியம், அன்பரசு, மேற்கு காலனி பள்ளி பி.டி.ஏ. தலைவர் ரவி,கவுன்சிலர் ராஜ், உள்ளிட்ட பலர் சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினர். பொதுநல ஆர்வலர் பழனிவேல் பள்ளிக்கு ஸ்பீக்கர் செட் வழங்கினார். என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu