குமாரபாளையம் அருகே வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட டூவீலர் திருட்டு

X
பைல் படம்.
By - K.S.Balakumaran, Reporter |1 Oct 2021 6:30 PM IST
குமாரபாளையம் அருகே வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட டூவீலர் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம் காவேரி நகரில் வசிப்பவர் கணபதி, 24. விசைத்தறி கூலித்தொழிலாளி. இவர் தன் வீட்டின் முன்பு தனது பஜாஜ் பல்சர் என்ற வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார்.
மறுநாள் காலை 6 மணியளவில் வெளியில் வந்து பார்த்த போது, நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தை காணவில்லை. இதன் மதிப்பு 45 ஆயிரம் என கூறபடுகிறது.
இது குறித்து புகாரின் பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து காணாமல் போன டூவீலரை தேடி வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu