டூவீலர், சரக்கு வாகனம் மோதி நிதி நிறுவன நிர்வாகி படுகாயம்

டூவீலர், சரக்கு வாகனம் மோதி
நிதி நிறுவன நிர்வாகி படுகாயம்
குமாரபாளையம் அருகே டூவீலர், சரக்கு வாகனம் மோதி நிதி நிறுவன நிர்வாகி படுகாயமடைந்தார்.
குமாரபாளையம் பி.எட்., கல்லூரி எதிரில் காமராஜ் நகரில் வசிப்பவர் குணசேகரன், 53. நிதி நிறுவன நிர்வாகி. இவர் நேற்றுமுன்தினம் காலை 10:40 மணியளவில், தனது ஹோண்டா கிளாமர் வாகனத்தில் பவர் ஹவுஸ் எதிரில் சென்று கொண்டிருக்கும் போது, மகேந்திரா சரக்கு வாகனம் இவர் வந்த டூவீலர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இது குறித்து குணசேகரன் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்க, விபத்துக்கு காரணமான சரக்கு வாகன ஓட்டுனர் எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த குமரவேல், 54, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu