குமாரபாளையத்தில் டூவீலர் கவிழ்ந்து விபத்து: பெண் சாவு, இருவர் படுகாயம்

குமாரபாளையத்தில் டூவீலர் கவிழ்ந்து விபத்து: பெண் சாவு, இருவர் படுகாயம்
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் டூவீலர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்; இருவர் படுகாயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம், பவானி, காடையாம்பட்டியில் வசிப்பவர் குழந்தைசாமி, 47. விசைத்தறி கூலி. இவர் தனது இருசக்கர வாகனத்தில், தன் மகள் தர்சனா, 21, தன் மனைவி கவிதா, 41, இருவரை பின்னால் உட்கார வைத்துக்கொண்டு குமாரபாளையம் அருகே குலதெய்வம் கோவிலுக்கு சென்று விட்டு, பவானியில் உள்ள தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

குமாரபாளையம் காவிரி பழைய பாலத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி இருசக்கர வாகனம் சாய்ந்தது. இதில் மூவரும் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், கவிதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற இருவரும் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து, கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது பற்றி குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture