குமாரபாளையம்: டூவீலர்கள் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்

குமாரபாளையம்: டூவீலர்கள் மோதிய விபத்தில்   இருவர் படுகாயம்
X
குமாரபாளையம் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

குமாரபாளையம் அருகே எலந்தகுட்டை பகுதியில் வசிப்பவர் வீராசாமி, 53, விவசாயி. இவரும், இவரது நண்பர் சிவகுமார், 45, ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் வாகனத்தில் சென்றனர். வெப்படை ரோடு, பாலமரத்து முனியப்பன் கோவில் அருகே மாலை 06:00 மணிக்கு, இருசக்கர வாகனத்தில், வீராசாமி ஓட்ட, சிவகுமார் பின்புறம் உட்கார்ந்தவாறு குமாரபாளையம் நோக்கி சென்று சென்று கொண்டிருந்தனர்.

அங்குள்ள ஒரு வளைவில் திரும்ப காத்திருக்கும் போது, பின்னால் வேகமாக வந்த மற்றொரு டூவீலர் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான குள்ளநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அருண்குமார், 34, என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?