/* */

குமாரபாளையத்தில் இருவேறு விபத்துக்களில் இருவர் படுகாயம்

குமாரபாளையத்தில் நடைபெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் இருவேறு விபத்துக்களில் இருவர் படுகாயம்
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கத்தேரி சாமியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியன், 70. கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை 05:30 மணிக்கு சேலம் கோவை புறவழிச்சாலையில் ஓரமாக நடந்து சென்ற போது, அவருக்கு பின்னால் வேகமாக வந்த பதிவு எண் தெரியாத டூவீலர் ஓட்டுனர் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் பிரேமா, 44. தறி ஓட்டும் கூலி. இவர் கல்லங்காட்டுவலசு பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று 05:00 மணியளவில் நடந்து சென்ற போது, இவருக்கு எதிராக வேகமாக வந்த ஸ்கூட்டி பெப் வாகன ஓட்டுனர் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.

இவர் பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்கூட்டி பெப் வண்டியில் வந்த கட்டுமான தொழிலாளி ஆனங்கூரை சேர்ந்த பெரியசாமி, 42, என்ற நபரை பிடித்தும், இந்த இரு வழக்குகளையும் பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 26 Aug 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு