/* */

குமாரபாளையத்தில் சி.பி.எம் சார்பில் நன்மாறனுக்கு அஞ்சலி கூட்டம்

குமாரபாளையம் சி.பி.எம் சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறனுக்கு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் சி.பி.எம் சார்பில் நன்மாறனுக்கு அஞ்சலி கூட்டம்
X

குமாரபாளையம் சி.பி.எம் சார்பில், ஆனங்கூர் பிரிவில்,  முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறனுக்கு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. 

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன் மறைவிற்கு, குமாரபாளையம் சி.பி.எம் சார்பில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. குமாரபாளையம் ஆனங்கூர் பிரில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர குழு உறுப்பினர் காளியப்பன் தலைமை வகித்தார்.

இதில் மூத்த நிர்வாகி ஆறுமுகம் பேசியதாவது: எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் தேவையில்லை என சட்டமன்றத்தில் பேசியவர். அனைவரும் அதே சம்பளம் பெறும் போது, தானும் பெற்று அதனை கட்சி அலுவலகத்தில் கொடுத்து விட்டு, தனக்கு மாத சம்பளமாக 10 ஆயிரம் மட்டும் பெற்றுக்கொண்டவர் நன்மாறன்.
என் .எஸ்.கே. போல் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர். இதனால், அவரை அனைவரும் மேடை கலைவாணர் என்றும் அழைப்பார்கள். சிறந்த எழுத்தாளரும் கூட. மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு இருமுறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டும், இதுவரை சொந்த வீடு இல்லாதவர். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர். நிர்வாகிகள் சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர் ஆறுமுகம், நகரக்குழு உறுப்பினர்கள் சண்முகம், சரவணன், மாதேஸ், பெருமாயி, ஏ.ஐ.சி.சி.டி.யூ. சுப்ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 30 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...