/* */

நடிகர் விவேக் மறைவுக்கு குமாரபாளையத்தில் கண்ணீர் அஞ்சலி

சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக்கின் மறைவுக்கு குமாரபாளையத்தில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

தமிழ் திரையுலகில் சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்த நடிகர்கள், கலைஞர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுதவிர, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பசுமை ஆர்வலர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலதரப்பினரும் நடிகர் விவேக் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலும், நடிகர் விவேக் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. குமாரபாளையம், பள்ளிபாளையம் பிரிவில் தன்னார்வ அமைப்பினர் சார்பில், மறைந்த விவேக்கின் படத்திற்கு மலர்தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் பேசிய பலரும், நடிகர் விவேக் திரை உலகத்திற்கும் சமூகத்திற்கும் செய்த சமூகச்சேவைகளை நினைவுகூர்ந்து , சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை நடும் பணியை நாமும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Updated On: 17 April 2021 1:19 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  10. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்