குமாரபாளையம் நகராட்சியில் சுயேட்சையாக திருநங்கை வேட்புமனு தாக்கல்

குமாரபாளையம் நகராட்சியில் சுயேட்சையாக திருநங்கை வேட்புமனு தாக்கல்
X

குமாரபாளையம் 32வது வார்டில் போட்டியிட சுயேட்சையாக மனுதாக்கல் செய்த திருநங்கை சபீதா.

குமாரபாளையம் நகராட்சியில் சுயேட்சையாக திருநங்கை வேட்புமனு தாக்கல் செய்தார்.

குமாரபாளையம் 32வது வார்டில் திருநங்கைகள் சார்பில் போட்டியிட மாவட்ட தி.மு.க. செயலர், நகர தி.மு.க. பொறுப்பாளர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அந்த வார்டு இல்லையென்றாலும் வேறு வார்டு தருகிறோம் என கூறியதாக தெரிகிறது.

இதனால் அதிருப்தியடைந்த திருநங்கை வேட்பாளர் சபீதா, 32வது வார்டில் போட்டியிட சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவருக்கு பொதுமக்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture