குமாரபாளையத்தில் குதிரைகளால் போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் விபத்து

குமாரபாளையத்தில் குதிரைகளால் போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் விபத்து
X

குமாரபாளையம் சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குதிரைகள் சுற்றித்திரிகின்றன.

குமாரபாளையத்தில் குதிரைகளால் போக்குவரத்திற்கு இடையூறு விபத்து அபாயம், மற்றும் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டு வருகிறது.

குமாரபாளையத்தில் குதிரைகளால் போக்குவரத்து இடையூறு,விபத்து அபாயம், மற்றும் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குமாரபாளையம் அருகே ஆலங்காட்டுவலசு பகுதியில் விவசாயி தேவராஜ் என்பவரின் கரும்பு பயிர்களை குதிரைகள் இரவில் வந்து மேய்ந்து விட்டு சென்று விட்டது. நேற்றுமுன்தினம் கோட்டைமேடு பகுதிகளில் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் நெல் நாற்றங்கால்களில் நெல் நாற்றுப் பயிரை மேய்ந்து விட்டு சென்று விட்டது.

மீண்டும் அவர்கள் நாற்று விட்டு பயிர் செய்தால் இன்னும் ஒரு மாத காலம் கடந்து தான் பயிர் நடவை செய்ய வேண்டி உள்ளது. அதற்குள் மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்படும். அதனால் விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஆகவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நாமக்கல் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு அலுவலர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு தொல்லை தரும் குதிரைகளை பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுதுள்ளார்கள்.

சேலம் சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று அச்சுறுத்தி வருகிறது. இதனால் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. விபத்து சம்பவங்களும் குதிரைகளால் நடந்து வருவதால், குதிரைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story