/* */

கொரோனா காலத்தில் மூடப்பட்ட கடைகளின் வாடகையை தள்ளுபடி செய்ய கோரிக்கை

கொரோனா காலத்தில் மூடப்பட்ட கடைகளின் வாடகையை தள்ளுபடி செய்ய, பவானி பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கொரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்ட கடைகளின் வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, பவானி பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள், நகராட்சி கமிஷனர் லீனா சைமனிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கொரோனா முதல், இரண்டாம் அலையின் போது, தமிழக அரசு அறிவிப்பின்படி பவானி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் செய்த போதும், இயல்பு நிலை திரும்பவில்லை.

இந்நிலையில், கொரோனா பரவலின் போது மூடபட்டிருந்த காலத்துக்கு, வாடகை செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் வியாபாரிகள் கடுமையாக நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். எனவே, கடைகள் மூடப்பட்ட காலத்துக்கான வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் சங்க தலைவர் தனபால், செயலர் மாணிக்கராஜ், ஒருங்கிணைப்பாளர் யாழினி உள்ளிட்ட பலர் நகராட்சி கமிஷனரிடம் மனு வழங்கினர்.

Updated On: 21 Oct 2021 9:18 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...