15 பவுன் திருட்டு சம்பவம் நடந்ததையடுத்து, போலீசார் தீவிர ரோந்து பணி

15 பவுன் திருட்டு சம்பவம் நடந்ததையடுத்து, போலீசார் தீவிர ரோந்து பணி
குமாரபாளையத்தில் 15 பவுன் திருட்டு சம்பவம் நடந்ததையடுத்து, போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
குமாரபாளையத்தில் 15 பவுன் திருட்டு சம்பவம் நடந்ததையடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு முழுதும் ஆய்வு செய்ததில், கலைமகள் தெரு, பிள்ளையார் கோவில் அருகில், பகுதியில் சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த ஜெயசீலன், 18, ராகவன், 18, கவியரசு, 18, கனகா, 24, ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள். குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைப்பகுதிகள் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். 15 பவுன் நகைகள் திருடப்பட்டது இந்த பகுதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu