/* */

மீண்டும் வேலை கேட்டு சாலையில் படுத்து ரகளை செய்த தூய்மை பணியாளர்

குமாரபாளையம் நகராட்சி தற்காலிக முன்னாள் தூய்மை பணியாளர் குடி போதையில் சாலையில் படுத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தினார்.

HIGHLIGHTS

மீண்டும் வேலை கேட்டு சாலையில் படுத்து ரகளை செய்த தூய்மை பணியாளர்
X

குமாரபாளையம் நகராட்சி தற்காலிக முன்னாள் தூய்மை பணியாளர் குடி போதையில் சாலையில் படுத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தினார்

குமாரபாளையம் நகராட்சி தற்காலிக முன்னாள் தூய்மை பணியாளர் குடி போதையில் சாலையில் படுத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர் மற்றும் வாகன ஓட்டுனராக பணிபுரிந்தவர் மாதேஸ், 48. இவர் இரண்டு நாட்கள் முன்பு குடிபோதையில் பணிக்கு வந்ததால் தனியார் நிர்வாகத்தினர் குடிபோதையில் பணிக்கு வரக்கூடாது என எச்சரிக்கை செய்து பணிநீக்கம் செய்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த தூய்மை பணியாளர் மாதேஷ், எடப்பாடி சாலையில் நேற்று மாலை 05:00 மணியளவில் மதுபோதையில் பள்ளி வாகனம் முன்பு படுத்துக்கொண்டு நகராட்சி தற்காலிக பணிகளில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என சத்தமிட்டபடி, இடைப்பாடி சாலையில் படுத்துக்கொண்டார்.

இதனால் போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பள்ளி வாகனங்கள் முன்பு குடி போதையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவரை குண்டு கட்டாக தூக்கி ஓரமாக அமர வைத்து காவல்துறையில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட டிரைவர் மாதேஸை அழைத்து சென்றனர்.

குடித்துவிட்டு பணிக்கு வருவதே தவறு. அதற்கு போராடுவதற்கு குடித்துவிட்டு ரகளை செய்தால் யார்தான் வேலை தருவார்கள்? அவரது மனைவி, குழந்தைகளை அவர் சிறிதும் சிந்தித்துப்பார்க்காமல் குடித்துவிட்டு பணிக்கு சென்றுள்ளார். குடும்ப பொறுப்பு இல்லாத இவரைப்போன்றவர்கள் இருப்பதால்தான் பல குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. இந்த சமூகம் அந்த குடும்பத்தையும் அவதூறு செய்கிறது. இவர்கள் திருந்தினால் மட்டுமே அவர்கள் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்.

Updated On: 14 July 2023 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு