/* */

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் பொங்கல் விழா...

குமாரபாளையத்தில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் பொங்கல் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் பொங்கல் விழா...
X

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்த குட ஊர்வலம் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தினசரி மார்க்கெட் உள்ளது. இந்த தினசரி மார்க்கெட்டில் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பொங்கல் விழா சங்க தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காவேரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

ஆற்றில் இருந்து மேள, தாளங்களுடன் பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்தவாறு தீர்த்தக்குடங்கள், அக்னி சட்டிகள் எடுத்தவாறு ஊர்வலமாக சென்றனர். பின்னர், மார்க்கெட் வளாகத்தில் உள்ள அம்மனுக்கு மற்றும் முத்து முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின்போது, குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், திமுக நகர செயலாளர் செல்வம், அதிமுக நகர செயலாளர் பாலசுப்ரமணி ஆகியோர் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில், குமாரபாளையம் தினசரி மார்க்கெட் சங்க நிர்வாகிகள் தாமோதரன், சந்திரசேகர், பிரபு, சித்தன், சுப்ரமணி, நாகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொங்கல் விழா குறித்து குமாரபாளையம் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் துரைசாமி கூறியதாவது:

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் ஆண்டுதோறும் ஆண்டுவிழா மற்றும் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். குமாரபாளையம் நகரில் வாரச்சந்தையில் பிரதி வெள்ளிகிழமை கூடுவது வழக்கம். அதை விட்டால் மற்ற நாட்களில் தினசரி காய்கறி மார்க்கெட்டில் வந்து பொதுமக்கள் காய்கறிகள் வாங்கி வந்தனர்.

ஆனால், தற்போது எம்.ஜி.ஆர், நகர், வட்டமலை, கல்லங்காட்டுவலசு உள்ளிட்ட பல இடங்களில் செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் சந்தை கூடுவதால் அந்தந்த பகுதி மக்கள் காய்கறிகள் அங்கு வாங்கி கொள்கிறார்கள். இதனால் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் கஷ்டத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அந்த துன்பம் எல்லாம் நீங்க வேண்டியும், மீண்டும் கொரோனா வராமல் இருக்கவும் வேண்டித்தான் பொங்கல் விழா நடைபெற்றது என துரைசாமி தெரிவித்தார்.

Updated On: 4 Jan 2023 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்