Begin typing your search above and press return to search.
பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய திமுகவினர்
குமாரபாளையத்தில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு திமுக.வினர் உணவு வழங்கினர்.
HIGHLIGHTS
குமாரபாளையத்தில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க.வினர் உணவு வழங்கினர்.
காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட காவிரி கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட செயலர் மூர்த்தி அறிவுறுத்தல்படி நகர தி.மு.க. சார்பில் நகர செயலர் செல்வம் தலைமையில் காலை, மாலை, இரவு வேளைகளில் தினமும் உணவு வழங்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவ உதவி, மக்கள் நீதி மய்யம் சார்பில் டீ, ரொட்டி வழங்கப்படுகிறது. இதில் கவுன்சிலர்கள் ரங்கநாதன், நிர்வாகிகள் ரவி, அன்பரசு, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.