குமாரபாளையத்தில் தட்டான்குட்டை மாரியம்மன் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையத்தில் தட்டான்குட்டை மாரியம்மன் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம்
X

குமாரபாளையத்தில் தட்டான்குட்டை செல்வ மாரியம்மன் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலத்தில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் அருள்பாலித்தவாறு வந்தார். 

குமாரபாளையத்தில் தட்டான்குட்டை செல்வ மாரியம்மன் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை செல்வ மாரியம்மன் திருவிழா மார்ச் 29ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காவிரி ஆற்றிலிருந்து மேளதாளங்கள் முழங்க, மஞ்சள் ஆடை கட்டி பெண்கள் தீர்தக்குடங்கள் எடுத்து வர, வண்ண மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மாரியம்மன் அருள்பாலித்தவாறு வீதியுலா வந்தார்.

இன்று அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடவுள்ளார்கள். பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business