குமாரபாளையம்: வீராச்சிபாளையம் மாரியம்மன் கோவில் தீர்த்தக்குட ஊர்வலம்

X
குமாரபாளையம் அருகே வீராச்சிபாளையம் மாரியம்மன் திருவிழாவில், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், அம்மன் அருள்பாலித்தார்.
By - K.S.Balakumaran, Reporter |7 April 2022 5:45 AM IST
குமாரபாளையம் அருகே, வீராச்சிபாளையம் மாரியம்மன் திருவிழாவில், தீர்த்தக்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.
குமாரபாளையம் அருகே வீராச்சிபாளையத்தில், ஸ்ரீ செல்வ மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு திருவிழா, மார்ச் 29ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன் தினம், காவிரி ஆற்றில் இருந்து மேளதாளங்கள் முழங்க, மஞ்சள் ஆடை கட்டி பெண்கள் தீர்தக்குடங்கள் எடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து வண்ண மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மாரியம்மன் அருள்பாலித்தவாறு வந்தார். நேற்று, அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu