Begin typing your search above and press return to search.
சித்தோடு அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
சித்தோடு அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
சித்தோடு அருகே நசியனூர், கதிரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி, 35. கட்டிட கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி, மகன், மகளுடன் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினி18, நேற்றுமுன்தினம் மாலை 4 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு வேலுசாமி, சித்தோடு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.