தேய்பிறை அஷ்டமி: குமாரபாளையம் கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு
X
குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவிலில் கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
By - K.S.Balakumaran, Reporter |23 April 2022 7:30 PM IST
தேய்பிறை அஷ்டமியையாெட்டி குமாரபாளையம் கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
குமாரபாளையத்தில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
தேய்பிறை அஷ்டமியையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், சாந்தபுரி கற்பக விநாயகர் கோவில்களில் கால பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu