/* */

பள்ளிபாளையம் போக்குவரத்து பணிமனை முன்பு ஊழியர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிபாளையம் போக்குவரத்து பணியாளர்கள் போராட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் போக்குவரத்து பணிமனை முன்பு  ஊழியர்கள் போராட்டம்
X

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிபாளையம் போக்குவரத்து பணியாளர்கள் போராட்டம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் போக்குவரத்து பணிமனை முன்பு வார ஓய்வை நிறுத்தக்கூடாது,ஊதியம் பறிக்கக் கூடாது என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் போக்குவரத்து பணிமனை முன்பு தொ.மு.ச.,சி.ஐ.டி.யு.,ஏ.ஐ.டி.யு.சி.,டி.டி.எஸ்.எஃப்,ஐ.,என்.டி.யு.சி.,உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வார ஓய்வை தடுக்கக்கூடாது,போக்குவரத்துக்கழக விடுப்பு விதிகளை மாற்றக் கூடாது,தொழிலாளர்களுக்கு சம்பள பறிப்பு செய்யக்கூடாது,தொழிலாளர் துறை அறிவுரையை பின்பற்ற வேண்டும் என்றும், பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும். மேலும் கோடை காலத்தில் பணிமனையில் வெயில் தாக்கத்தை உணர்ந்து போக்குவரத்து துறை மூலம் தொழிலாளர்களுக்கு மோர் உள்ளிட்ட நீர் ஆதார பானங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 21 April 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!