குமாரபாளையத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு

குமாரபாளையத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு
X

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன்,  பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குமாரபாளையத்தில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில், நீர்மோர் பந்தல் திறப்பு விழா தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ, இதனை திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன், பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். கவுன்சிலர் புருஷோத்தமன், மனோகர், சந்திரன், தவமணி, சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture