/* */

ஆசிரியை கண்டித்தால் தற்கொலை: மாணவனின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

பள்ளிபாளையம் அருகே ஆசிரியை கண்டித்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடலை வாங்க அவரது உறவினர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

HIGHLIGHTS

ஆசிரியை கண்டித்தால் தற்கொலை: மாணவனின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
X

மாணவனின் உடலை வாங்க அவரது உறவினர்கள் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.

பள்ளிபாளையம் அருகே தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. கட்டுமான தொழிலாளியான இவரது மகன் ரிதுன். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சக மாணவியுடன் பேசியதற்காக பள்ளி ஆசிரியை ஒருவர் திட்டியதுடன், பள்ளிக்கு வெளியே நிற்க வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் பள்ளிக்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த ஈரோடு ரயில்வே போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மாணவரின் உடல் பெருந்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சம்பவத்திற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, மாணவனின் உறவினர்கள் உடலை வாங்க தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

இது குறித்து திருச்செங்கோடு டி.எஸ்.பி. வெப்படை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 25 March 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  7. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  9. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  10. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்