நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட தேங்கிய நீர்..!

நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட   தேங்கிய நீர்..!
X

கனரக வாகனங்கள் செல்லும் போது குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்படுவதால், இணைப்பு சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லாத வகையில் மண் கொட்டப்பட்டு அடைக்கப்பட்டது. 

குமாரபாளையம் அருகே நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் தேங்கி இருந்த நீர் அகற்றப்பட்டது.

குமாரபாளையம் அருகே நெடுஞ்சாலையில் தேங்கிய நீர் அகற்றப்பட்டது.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனால் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு வருகிறது. இதன் சாலை மிக குறுகியதாக இருப்பதால், அனைத்து வாகனங்களும் மெதுவாக சென்று வருகின்றன.

இந்த பகுதியில் உள்ள டி மார்ட் எனும் வணிக வளாகம் அருகே, குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகனங்கள் செல்ல தடுமாறும் நிலை ஏற்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நீரை வடிய செய்து, போக்குவரத்து சீராக நடந்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி எடுத்த நடவடிக்கையின்படி, தேங்கிய நீர் அகற்றப்பட்டது. இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்லும் போது குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்படுவதால், இணைப்பு சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லாத வகையில் மண் கொட்டப்பட்டு அடைக்கப்பட்டது.

குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பால கட்டுமான வளைவில் ஆபத்தான முறையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆனால் கத்தேரி பிரிவு சர்வீஸ் சாலை வளைவு பகுதியில் பிளெக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்கள், கடை விளம்பரங்கள் என ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், வாகனங்கள் செல்ல பெரிதும் சிரமம் ஏற்படுகிறது.

இதனால் அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்று ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கால விரயம், எரிபொருள் விரயம் ஏற்படுவதுடன், வழக்கமாக இந்த வழியில் அன்றாட வேலைக்கு செல்பவர்கள், வட்டமலை, எதிர்மேடு பகுதியில் உள்ள எண்ணற்ற கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர், குமாரபாளையம் ஜவுளி உற்பத்திக்கு தேவையான நூல்களை ஏற்றி வரும் லாரிகள், இதர கடைகளுக்கு சாமான்கள் ஏற்றிவரும் சரக்கு வாகனங்கள், சேலம், திருச்செங்கோடு, சங்ககிரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பேருந்துகள் குமாரபாளையம் நகரிலிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள், என பலதரப்பட்ட வாகனங்கள் செல்ல பெரிதும் சிரமம் ஏற்படுகிறது.

இந்த பகுதியில் இருபுற சர்வீஸ் சாலையில் எந்த போக்குவரத்து போலீசாரும் நின்று போக்குவரத்து சரி செய்வது இல்லை. ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் நிலை மாற, உடனே இந்த இருபுற சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், போக்குவரத்து போலீசார் சிப்ட் முறையில் செயல்பட்டு, இரவு பகலாக போக்குவரத்து சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடையூராக இருக்கும் பேனர்கள் அகற்றப்பட்டு, இங்கு பேனர்கள் வைக்க தடை விதிக்க வேண்டும்.

Tags

Next Story
ai in future agriculture