குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் தை சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள்

குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் தை சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள்
X

குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

தை சனிக்கிழமை நாளையொட்டி குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தை மாத சனிக்கிழமை நாளையொட்டி, குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில், ஜெய்ஹிந்த் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவில், கோட்டைமேடு ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாமோதரசுவாமி கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன.

இதனையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture