குமாரபாளையத்தில் மகாலட்சுமி அலங்காரத்தில் சவுண்டம்மன்

குமாரபாளையத்தில் மகாலட்சுமி அலங்காரத்தில் சவுண்டம்மன்
X

குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் அம்மன் மகாலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

அமாவாசை நாளையொட்டி குமாரபாளையம் கோட்டைமேடு காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

பாண்டுரங்கர் கோவிலில் சிறப்பு ஆனி திருமஞ்சன விழா, சரவணா தியேட்டர் எதிரில் கருப்பண்ண சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது.

Tags

Next Story
ai as the future