சவுண்டம்மன் திருவிழா சாமுண்டி அழைப்பு: மகா ஜோதி திருவீதி உலா

சவுண்டம்மன் திருவிழா சாமுண்டி அழைப்பு: மகா ஜோதி திருவீதி உலா
X

குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவில் சக்தி அழைப்பு வைபவத்தையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் சவுண்டம்மன் திருவிழாவில் சாமுண்டி அழைப்பு மகா ஜோதி திருவீதி உலா நடைபெற்றது.

சேலம் சாலை, பழைய பேட்டை சவுண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்றுமுன்தினம் சக்தி அழைப்பு வைபவத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன.

காவேரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல் வைபவம் நடைபெற்றது. இதில் வீரகுமாரர்கள் கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்தனர். நேற்று காலை 09:00 மணியளவில் காவேரி ஆற்றிலிருந்து சாமுண்டி அழைப்பு வைபவமும், இரவு மகா ஜோதி திருவீதி உலாவும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வைபவத்தை கண்டு ரசித்ததுடன், அம்மனை வழிபட்டனர்.

அம்மன் சக்தி கோவிலை வந்தடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story