/* */

குமாரபாளையத்தில் புதிய மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை துவக்கம்

குமாரபாளையத்தில் புதிய மேம்பாலம் கட்ட மண் பரிசோதனைப் பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் புதிய மேம்பாலம் கட்ட   மண் பரிசோதனை துவக்கம்
X

கத்தேரி பிரிவு பகுதியில் நடைபெறும் மண் பரிசோதனைப் பணிகள்.

குமாரபாளையம் அருகே சேலம்-கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் அதிக வாகனங்கள் சாலையை கடந்து செல்கின்றது. தட்டான்குட்டை ஊராட்சி அலுவலகம், வேமன்காட்டுவலசு, சத்யா நகர், அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இந்த சாலையை கடந்துதான் செல்ல வேண்டும்.

இந்த பகுதிகளில் விசைத்தறி கூடங்கள், சாயப்பட்டறைகள், விவசாய விளை நிலங்கள், ஸ்பின்னிங் மில்கள், தானியங்கி விசைத்தறி கூடங்கள் உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் இந்த சாலையை கடந்துதான் செல்ல வேண்டும்.

இந்த பகுதியில் பொதுமக்கள் சாலையை கடக்கும்போது அதிக விபத்துகள் ஏற்பட்டு பலர் காயமடைந்தும், விபத்து உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே இந்த பகுதியில் மேம்பாலம் அவசியம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன் பலனாக இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை பணிகள் தற்போதுதுவங்கியுள்ளன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 26 Aug 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?