குமாரபாளையத்தில் சோடியம் விளக்கு பழுது நீக்கம்: மக்கள் மகிழ்ச்சி

குமாரபாளையத்தில் சோடியம் விளக்கு பழுது நீக்கம்: மக்கள் மகிழ்ச்சி
X

குமாரபாளையம் சேலம் -கோவை புறவழிச்சாலை பகுதியில் பழுது நீக்கம் செய்யப்பட்ட சோடியம் விளக்கு.

குமாரபாளையத்தில் எரியாமல் இருந்த சோடியம் விளக்கு பழுது நீக்கம் செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குமாரபாளையம் சேலம் - கோவை புறவழிச்சாலை பகுதியில் சோடியம் விளக்கு சில நாட்களாக எரியாமல் இருந்தது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தவிப்புக்கு ஆளாகினர். மேலும் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் விஷ ஜந்துக்கள் மற்றும் சமூக விரோதிகளின் அச்சத்தில் இருந்து வந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் புகாரின் பேரில், எரியாமல் இருந்த சோடியம் விளக்கு பழுது நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags

Next Story