/* */

குமாரபாளையம் அருகே கோழிப்பண்ணையில் புகுந்த பாம்பு மீட்பு

குமாரபாளையம் அருகே கோழிப்பண்ணையில் புகுந்த பாம்பை, தீயணைப்பு படையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே  கோழிப்பண்ணையில் புகுந்த பாம்பு மீட்பு
X

கோழிப்பண்ணையில் மீட்கப்பட்ட பாம்பு.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பபுள்ளக்கவுண்டம்பட்டி பகுதியில் குருசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருபவர் சரவணன், 35. இவரது கோழிப்பண்ணையில் தினமும் ஒன்று அல்லது இரண்டு கோழிகள் இறந்து கிடப்பது வாடிக்கையாக இருந்து வந்தது.

நேற்றுமுன்தினம் இரவு, கோழி அடைகாத்து வந்த முட்டை மீது பாம்பு ஒன்று இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இரவில் செய்வதறியாத நிலையில் நேற்று காலை குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில், நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் வந்த படையினர், 5 அடிக்கும் மேலான நீளமுள்ள நாகப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அதனை ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

Updated On: 11 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  2. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  3. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  4. சூலூர்
    சூலூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; விற்பனைக்கு வைத்திருந்த நபர்...
  5. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  6. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  7. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  8. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அருகே கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
  9. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ