/* */

குமாரபாளையத்தில் மக்கள் நடமாட்ட பகுதியில் புகுந்த பாம்பு: தீயணைப்பு படையினர் மீட்பு

குமாரபாளையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் புகுந்த பாம்பை மீட்புக்குழுவினர் பிடித்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மக்கள் நடமாட்ட பகுதியில் புகுந்த பாம்பு: தீயணைப்பு படையினர் மீட்பு
X

குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை, காந்திநகர் இரண்டாவது வீதி, தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில், துரைசாமி வீடு அருகில் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்புப்படையினர்.

குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை, காந்திநகர் இரண்டாவது வீதி, தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில், துரைசாமி வீடு அருகில் பாம்பு ஒன்று இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் சென்ற மீட்புக்குழுவினர் ஒரு மணி நேரம் போராடி பாம்பை பிடித்தனர். அது கண்ணாடி விரியன் இனத்தை சேர்ந்தது எனவும் மீட்புக்குழுவினர் கூறினர். பிடிபட்ட பாம்பை ஆள் நடமாட்டமில்லாத வனத்துறை பகுதியில் விடப்பட்டது.

ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் அடிக்கடி பாம்புகள் வருவது வழக்கமாக உள்ளது. இங்குள்ள வடிகால் தூய்மை படுத்தாமல் உள்ளது, அதிக முட்புதர்கள் மண்டி கிடப்பதே இதற்கு காரணமாக உள்ளது.

குழந்தைகள், வயதானவர்கள் இருக்கும் இடம் என்பதால், நோய்கள் பரவாமல் இருக்கவும், இது போல் விஷ ஜந்துக்கள் வராமல் இருக்கவும் இந்த பகுதியில் தூய்மை பணியினை குப்பாண்டபாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் செய்திட வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Updated On: 18 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!