சமயசங்கிலி துணை மின் நிலைய பகுதிகளில் செப். 21ம் தேதி மின் நிறுத்தம்

சமயசங்கிலி துணை மின் நிலைய பகுதிகளில் செப். 21ம் தேதி மின் நிறுத்தம்
X

பைல் படம்.

சமயசங்கிலி துணை மின் நிலைய பகுதிகளில் வரும் 21ம் தேதி மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் வரும் 21ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில், சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் செப். 21ல் காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓட்டமெத்தை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிராமண பெரிய அக்ரஹாரம், சக்தி ரோடு, பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், வைராபாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business