குமாரபாளையத்தில் அரசு பள்ளியில் கட்டிடம் சீரமைத்த பொதுநல அமைப்பினர்

குமாரபாளையத்தில் அரசு பள்ளியில் கட்டிடம்  சீரமைத்த  பொதுநல அமைப்பினர்
X

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், சீரமைக்கப்பட்ட கட்டிடத்தை, மாணவியர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் அரசு பள்ளியில், சேதமடைந்த கட்டிடத்தை பொதுநல அமைப்பினர் சீரமைத்து தந்தனர்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் தளத்தில் தடுப்பச்சுவர் சேதமானது. அங்கு, கம்பிவலை அமைத்து சீரமைத்தல், கழிவறை சேதமான பகுதிகளை சீரமைத்தல் ஆகிய பணிகளை தனியார் பொதுநல அமைப்பினர் சீரமைத்து தந்தனர்.

இதற்கான திறப்பு விழா, ஊராட்சி தலைவர் முத்துசாமி, ஆற்றல் அமைப்பின் தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மாணவியர்கள், இந்த சீரமைக்கப்பட்ட கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதில் பள்ளி தலைமையாசிரியர் வடிவேல், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture